அக்ஷராணாமகா1ரோஸ்மி த்3வன்த்3வ: ஸாமாஸிக1ஸ்ய ச1 |
அஹமேவாக்ஷய: கா1லோ தா4தா1ஹம் விஶ்வதோ1மு1க2: ||33||
அக்ஷராணாம்--—எல்லா எழுத்துக்களிலும்; அகாரஹ---தொடக்க எழுத்து ‘அ’ ; அஸ்மி—நான்; த்வந்த்வஹ--—இருமை; ஸாமாஸிகஸ்ய—--இலக்கண கலவைகளில்; ச--—மற்றும்; அஹம்--—நான்; ஏவ—மட்டும்; அக்ஷயஹ--—முடிவற்ற; காலஹ--—நேரம்; தாதா--—படைப்பாளர்களிடையே; அஹம்—நான்; விஸ்வதஹ-முகஹ—--ப்ரஹ்மா
BG 10.33: எல்லா எழுத்துக்களிலும் நான் ஆரம்பம் 'அ’. இலக்கண கலவைகளின் இரட்டை வார்த்தை. நான் முடிவற்ற காலம், படைப்பாளிகளில் நான் ப்ரஹ்மா .
Start your day with a nugget of timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!
ஸமஸ்கிருதம் ஒரு பழமையான மொழி என்றாலும், அது மிகவும் சீரமைக்கப்பட்டு மற்றும் அதிநவீனமானது. சமஸ்கிருதத்தில் ஒரு பொதுவான நடைமுறை வார்த்தைகளை இணைத்து கூட்டுச் சொற்களை உருவாக்குவது. ஒரு கூட்டுச் சொல்லை உருவாக்கும் செயல்பாட்டில், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சொற்கள் அவற்றின் வழக்கு முடிவைக் கைவிடும்பொழுது, அது ஸமாஸ என்றும், அதன் விளைவாக வரும் சொல் ஸமாஸ பத அல்லது கூட்டுச் சொல் என்றும் அழைக்கப்படுகிறது. முதன்மையாக ஆறு வகையான ஸமாஸங்கள் உள்ளன: 1) த்3வந்த3வ, 2) ப3ஹுப்3ரிஹி, 3) கர்1ம தா4ரய, 4) த1த்1பு1ருஷ், 5) த்3விகு, 6) அவ்யயீபா4வ் இவற்றில், த்வந்த்வ சிறந்தது, ஏனெனில் இரண்டு சொற்களும் அதில் முதன்மையாக உள்ளன, மற்றவற்றில், ஒரு சொல் அதிக முக்கியத்துவம் பெறுகிறது, அல்லது இரண்டு சொற்களும் ஒன்றிணைந்து மூன்றாவது வார்த்தையின் பொருளைக் கொடுக்கும். ராதா-கிருஷ்ணா என்ற இரட்டை வார்த்தை த்வந்த்வத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு. ஸ்ரீ கிருஷ்ணர் அதை தனது மகிமையின் வெளிப்பாடாகக் உயர்த்திக் காட்டுகிறார்.
ப்ரபஞ்சத்தின் உருவாக்கம் ஒரு அற்புதமான வேலை மற்றும் அதை காணுவது வியக்கத்தக்கது, அதேசமயத்தில் மனித இனத்தின் உயர்ந்த அறிவொளி மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை இதனுடன் ஒப்பிடுகையில் மனித இனத்தின் உயர்ந்த அறிவொளி மங்கலானதாக தோன்றும் எனவே, ப்ரபஞ்சம் முழுவதையும் உருவாக்கிய முதற்பிறந்த ப்ரஹ்மாவை ஸ்ரீ கிருஷ்ண பகவான் தனிமைப்படுத்துகிறார், மேலும் படைப்பாளர்களிடையே ப்ரஹ்மாவின் படைப்புத் திறன் கடவுளின் மகிமையை சிறப்பாக பிரதிபலிக்கிறது என்று கூறுகிறார்.